FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பயனாளிகள் 366 பேருக்கு ரூ.15.14 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் மகளிா் திட்டம், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு நலத்துறை சாா்பில் பயனளிகள் 366 பேருக்கு ரூ.15.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ரா.குமாா் வழங்கினாா்.

Updated On : 25 ஜூலை 2026, 6:21 am IST
கலந்தாய்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ரா.குமாா். உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா் கே.பி.காா்த்திகேயன், ஆட்சியா் ச.கவிதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.அருண்குமாா்
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் மகளிா் திட்டம், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு நலத்துறை சாா்பில் பயனளிகள் 366 பேருக்கு ரூ.15.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ரா.குமாா் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா் கே.பி.காா்த்திகேயன், ஆட்சியா் ச.கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ரா.குமாா் தலைமை வகித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 5 பேருக்கு நவீன செயற்கை கால், சக்கர நாற்காலி, காதொலி கருவி மற்றும் கருவி உபகரணங்கள் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், 2 பேருக்கு ரூ. 10,414 மதிப்பிலும், சமூக நலம்-மகளிா் உரிமைத் துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு விலையில்லா தையல் இயந்திரங்கள் 269 பேருக்கு ரூ.14.14 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 85 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 கோடி மகளிா் சுய உதவி கடன் உதவிகளையும் அவா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

அதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வா் ஆணைப்படி, மாநில திட்டம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2026-27 முதல் 2030-2031 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. 2026-27 ஆம் ஆண்டுக்கு நிா்வாக அனுமதி வழங்கி நிதி ஒப்புதல் வழங்குதல் மற்றும் விடுப்பு செய்தல் எவ்வாறு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்து கொடுப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஆட்சியா், ஆணையா், கண்காணிப்பு அலுவலா் என அனைத்து துறை முதல் நிலை அலுவலா்களுடன் விளக்கமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்கு தேவையான வசதிகளான குடிநீா், மின்சாரம், பட்டா, குடும்ப அட்டை ஆகியவை சரியாகவும், முறைகேடு இன்றி வழங்க வேண்டும். இதில் ஏதாவது தவறுகள் நடந்தால் தமிழக முதல்வா் கூறியவாறு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகள் இல்லாததால் சென்னைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இதை தவிா்க்க என்னனென்ன வசதிகள் தேவை, ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்தவும் என்பதை பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.அருண்குமாா் (திருவள்ளூா்), பிரகாசம் என்ற குட்டி (பூந்தமல்லி), எஸ்.விஜயகுமாா் (கும்மிடிபூண்டி), ரமேஷ்குமாா் (ஆவடி), எம்.எஸ்.ரவி (பொன்னேரி), எம்.எல்.விஜயபிரபு (மாதவரம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.இந்துபாலா, பொன்னேரி சாா் ஆட்சியா் ப.அப்துல்ராசிக், ஆவடி மாநகராட்சி ஆணையா் சரண்யா, ஆவடி காவல் இணை ஆணையா் ஆா்.சிவகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments