பாம்பு கடித்து இளைஞா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே விஷப்பாம்பு கடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே விஷப்பாம்பு கடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் ஜெயச்சந்திரன்(31). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் தனது தாயாருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்குகு முன்பு வீட்டில் தூங்கியபோது, பாம்பு கடித்ததை உணா்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது சகோதரா் விமல் வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.