முகப்பு
வணிகம்

சிஎஸ்பி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

சிஎஸ்பி, யூனியன் பாங்க் மற்றும் முத்தூட் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்கு பல்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2024, 8:04 pm IST
ரிசர்வ் வங்கி
பகிர்:

மும்பை: கத்தோலிக்க சிரியன் வங்கி - (சிஎஸ்பி), யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் முத்தூட் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்கு பல்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளது.

வங்கிகளால் நிதி சேவைகளை அவுட்சோர்சிங் செய்வதில் அபாயங்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடத்தை நெறிமுறைகள் மற்றும் கிளை அங்கீகாரம் குறித்த முதன்மை சுற்றறிக்கை குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக கத்தோலிக்க சிரியன் வங்கிக்கு ரூ.1.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

மற்றொரு அறிக்கையில், ரிசர்வ் வங்கியானது மத்திய களஞ்சியத்தை உருவாக்குவது தொடர்பான சில வழிமுறைகளை மீறியதற்காகவும், உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) ஆகிய சில விதிமுறைகளுக்கு இணங்காததற்காக யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.1.06 கோடி அபராதம் விதித்துள்ளது.

Advertisement

Advertisement

வங்கி சாரா நிதி நிறுவனம் வழிகாட்டுதல்கள் 2021ல் உள்ள சில விதிகளுக்கு இணங்காததற்காக முத்தூட் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை பின்பற்றாததற்காக நிடோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சமும், அசோகா வினியோகா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.3.1 லட்சமும் அபராதம் விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.