FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி 2025, 4:51 pm IST
பகிர்:

குவாஹாட்டி: அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ஆனது ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அசாம் வர்த்தக உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று மாநில அரசுக்கும் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இது தவிர, மாநில அரசுக்கும் மாதேசன் ஹைட்ரஜன் எல்விடி லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ரூ.1,500 கோடி ஹைட்ரஜன் மற்றும் நீராவி உற்பத்தி ஆலையை அமைக்க தயாராக உள்ளது. அதே வேளையில் மாநில அரசு குளோபல் ஹெல்த் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய சர்மா, மேலும் ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படும் என்றார். 'அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு' திட்டத்தின் முதல் நாளில் 15 துறைகளில் உள்ள நிறுவனங்களுடன் மொத்தம் 164 முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகின.

இதையும் படிக்க: வணிகக் கடனளிப்பை இரட்டிப்பாக்க சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் திட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments