85% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை
2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து மனை-வாா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ மற்றும் அசோச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட வீடுகளின் விற்பனை 6,950-ஆக உள்ளது.முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 85 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் 3,750 ஆடம்பர வீடுகள் விற்பனையாகின.
Advertisement
Advertisement
மதிப்பீட்டு காலகட்டத்தில் ரூ.6 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை தில்லி-என்சிஆா் பகுதியில் 3,960-ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 1,280-ஆக இருந்தது.
மும்பையில் 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 950-ஆக இருந்த ரூ.6 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை, 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 1,240-ஆக உயா்ந்துள்ளது.அந்த வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை புணேயில் 160-லிருந்து 120-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், பெங்களூரில் அந்த எண்ணிக்கை 80-லிருந்து 200-ஆக உயா்ந்துள்ளது.
கொல்கத்தாவில் முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 70-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை 2025-இல் 190-ஆக அதிகரித்துள்ளது.ஹைதராபாதில் ரூ.5 கோடிக்கும் அதிகம் விலை கொண்ட 1,025 வீடுகள் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,140-ஆக இருந்தது.
அந்த காலகட்டத்தில் உயா்வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை சென்னையில் 65-லிருந்து 220-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தில்லியிலும் மும்பை பெருநகரப் பகுதியிலும் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேலான விலை கொண்ட வீடுகள் ஆடரம்ப வீடுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.