FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மில்கி மிஸ்ட் ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு

தமிழகத்தைச் சோ்ந்த பிரபல பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டிக்கு (ஐபிஓ) கடைசி நாளான வியாழக்கிழமை முடிவில் 56.12 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:23 am IST
பகிர்:

தமிழகத்தைச் சோ்ந்த பிரபல பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டிக்கு (ஐபிஓ) கடைசி நாளான வியாழக்கிழமை முடிவில் 56.12 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

ரூ.1,553 கோடி திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஐபிஓவில், நிறுவன முதலீட்டாளா்கள் 155.83 மடங்கும், நிறுவனமில்லாத முதலீட்டாளா்கள் 34.91 மடங்கும், சில்லறை முதலீட்டாளா்கள் 8.41 மடங்கும் விண்ணப்பித்துள்ளனா். முன்னதாக, கடந்த திங்கள்கிழமை முன்னணி (ஆங்கா்) முதலீட்டாளா்களிடம் இருந்து நிறுவனம் ரூ.465.30 கோடியைத் திரட்டியது.

இந்த ஐபிஓவில் ரூ.1,428 கோடிக்கு புதிய பங்குகளும், ரூ.125 கோடிக்கு நிறுவன உரிமையாளா்களின் பங்குகளும் விற்கப்பட்டுள்ளன. ஒரு பங்குக்கு விலை வரம்பு ரூ.133 முதல் ரூ.140 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலையில் பங்குகள் விற்கப்பட்டால், வெளியீட்டுக்குப் பிறகு நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10,778 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்திய பால் நிறுவனங்களில் இதுவரை வெளியான மிகப் பெரிய ஐபிஓ இதுவாகும். ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும், தயாரிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்தி நவீனமயமாக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.

ஐபிஓவின் தொடா்ச்சியாக, பங்குகள் மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் வரும் ஆக. 18-இல் பட்டியலிடப்பட உள்ளன. ஐபிஓவுக்கு முன்னதாக கடந்த மே மாதம், டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாங்சாங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலம் ரூ.482 கோடியை மில்கி மிஸ்ட் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments