டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 95.08 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 95.08 ஆக நிலைபெற்றது.
மும்பை: பணவீக்கம் மற்றும் அதிக அந்நியச் செலாவணி வெளியேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் என்ற அளவை கடந்தது வர்த்தகமான நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 95.08 ஆக நிலைபெற்றது.
பங்குச் சந்தையின் பலவீனம் மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் நிதி வெளியேற்றம் உள்ளிட்டவை, இந்திய ரூபாயின் மீது தொடர் அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றங்களுக்கு இடையில், மேற்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் நிலையங்கள் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விநியோகச் சங்கிலியை மேலும் பலவீனப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியது. இதனால், கடந்த ஆறு வாரங்களில் முதல் முறையாக 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் என்ற அளவை கடந்தது.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.80 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், ரூபாய் மதிப்பு சரிந்து நாளின் குறைந்தபட்ச அளவான ரூ. 95.22 ஐ எட்டியது. இறுதியில், முந்தைய நாள் வர்த்தக முடிவிலிருந்து ரூ. 94.74 ஆக இருந்த ரூபாய் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 95.08 ஆக நிலைபெற்றது.
The rupee slumped by 34 paise to close at 95.08 on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.