FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 78,571 கோடி டாலராக அதிகரிப்பு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 4,490.3 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

11 செப்டம்பர் 2026, 7:53 pm IST
பகிர்:

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அதன் கையிருப்பு சாதனை அளவான 4,490.3 கோடி டாலர் அதிகரித்து, இதுவரை இல்லாத புதிய உச்சமான 78,570.6 கோடி டாலரை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

இதற்கு முந்தைய வாரத்தில், ரிசர்வ் வங்கியின் மொத்த கையிருப்பு 1,147.5 கோடி டாலர் அதிகரித்து 74,080.3 கோடி டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கியதிலிருந்து, ரூபாய் மதிப்பு தொடர் சரிவு மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் டாலர்களை விற்பதன் மூலம் ரிசர்வ் வங்கி தலையிட வேண்டிய சூழலால் அதன் கையிருப்பு குறைந்தது.

Advertisement

Advertisement

இருப்பினும், ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி சலுகை அடிப்படையிலான அந்நியச் செலாவணி பரிமாற்ற நடவடிக்கைகளை அறிவித்ததிலிருந்து கையிருப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் மூலம் 13,600 கோடி டாலருக்கும் அதிகமான புதிய வரத்து கிடைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய நாணய சொத்துகளின் மதிப்பு 4,749.8 கோடி டாலர் அதிகரித்து 64,816.8 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments