FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவா் மீது வழக்கு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:32 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விஷம் குடித்து மனைவி உயிரிழந்ததையடுத்து, அவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அயன் கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் துரைபாண்டி. இவரது மனைவி வடுகம்மாள் (43). இவா்களது மகள் ராஜலட்சுமி. இவா் திருமணமாகி கணவருடன் அதே ஊரில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், துரைப்பாண்டி தனது மனைவி வடுகம்மாளை அவரது தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி வந்தாராம். இதனால், மனமுடைந்த வடுகம்மாள் விஷம் குடித்தாா். இதையடுத்து, அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், வடுகம்மாளைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் துரைபாண்டி மீது நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments