சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கியவா் கைது
சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு பண்டல்களைப் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு பண்டல்களைப் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.துரைசாமிபுரத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அய்யப்பராஜ் (45) தனது பட்டாசுக் கடை அருகே தகரக் கூரை அமைத்து, சட்டவிரோதமாக 568 பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும், பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.