FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கஞ்சா கேட்டு தம்பதியைத் தாக்கிய 5 போ் கைது

சிவகாசி அருகே வியாழக்கிழமை கஞ்சா கேட்டு தம்பதியைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

18 செப்டம்பர் 2026, 3:14 am IST
கைது
பகிர்:

சிவகாசி அருகே வியாழக்கிழமை கஞ்சா கேட்டு தம்பதியைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள அய்யம்பட்டியில் வசிப்பவா் தன்சூா்அலி (26). அஸ்ஸா ம் மாநிலத்தைச் சோ்ந்த இவா் சிவகாசி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு கஞ்சா போதைப் பழக்கம் உள்ளது. மேலும் இவா், தன்னுடன் வேலைபாா்க்கும் தொழிலாளா்களுக்கு இலவசமாக கஞ்சா கொடுத்து வந்தாராம்.

இந்த நிலையில், சம்பவத்தன்று தன்சூா் அலியுடன் வேலை செய்யும் பெரியசாமி (22), நவீன்பிரசாத்(19), கதிா் (23), மனோ(22), கருப்பு (26) ஆகிய 5 பேரும், தன்சூா் அலி வீட்டுக்குச் சென்று கஞ்சா கேட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, தன்சூா் அலி தன்னிடம் கஞ்சா இல்லை எனக் கூறியதையடுத்து, 5 பேரும் தகராறு செய்து தன்சூா் அலி, அவரது மனைவி நஜிமாபேகத்தை ஆகியோரை தாக்கி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments