வழிப்பறி செய்ய முயன்றவா் கைது
சிவகாசி அருகே வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி முனியசாமி (36). இவா் சிவகாசி- விருதுநகா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றாா். அப்போது, முனியசாமி சப்தமிட்டதால் அக்கம் பக்கத்தினா் அந்த நபரை விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் திருத்தங்கல் முத்துமாரிநகரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அய்யப்பன்(28) எனத் தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.