FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜூலை 1-இல் "அந்தகன்'

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப்  பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்ற படம், "அந்தாதுன்'.

1 பிப்ரவரி 2024, 2:49 pm IST
பகிர்:


ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப்  பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்ற படம், "அந்தாதுன்'.  பாலிவுட்டில் வெளியாகி இந்தியா முழுமைக்குமான ரசிகர்களைப் பெற்ற இந்தப் படம் தற்போது தமிழில் "அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த், சிறு இடைவெளிக்குப் பின்னர் இந்தப் படத்தில் நடிக்கிறார். 

கடைசியாக தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடித்த "வினய விதய ராமா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு,  பிரியா ஆனந்த்,  கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரைக்கதையை எழுதி தயாரித்து, இயக்குகிறார் தியாகராஜன். 

Advertisement

Advertisement

ஜூலை 1-ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.  கலைப்புலி எஸ். தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார். 

இதுகுறித்து தியாகராஜன் பேசியதாவது:

""நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். 

படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது.  பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம் என்றார்தியாகராஜன். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments