FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

 சத்துமாவு அடை 

சுவையான சத்துமாவு அடை செய்முறை

Updated On : 17 ஜூன் 2021, 5:14 pm IST
 சத்துமாவு அடை 
பகிர்:

தேவையானவை :
பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு,
உளுத்தம் பருப்பு - தலா 1கிண்ணம்
கொள்ளு - 1 கிண்ணம்
சோயா - 1 கிண்ணம்
வரமிளகாய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
கொத்துமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை : வெங்காயம், கொத்துமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு, கொள்ளு, சோயா அனைத்தையும் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பொருள்களுடன் மிளகாய், 
சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலையையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான சத்து மாவு அடை ரெடி. 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments