FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்

இடியாப்பத்துக்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கொண்டால்,  சுலபமாகப் பிழியும்.

Updated On : 10 ஜூலை 2022, 6:00 am IST
பகிர்:

இடியாப்பத்துக்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கொண்டால்,  சுலபமாகப் பிழியும்.

எந்தக் கீரை  வகைகளைச் சமைத்தாலும் தேங்காய் எண்ணெய் கொண்டு தாளித்தால், மணமும், ருசியும் அபாரமாக இருக்கும்.

சேமியா அல்லது ஜவ்வரிசிப் பாயாசம் செய்யும்போது, பால் முதலில் சேர்த்தப் பின்னர் சூடு ஆறினதும் சர்க்கரையைச் சேர்த்தால் பாயாசம் நீர்த்துப் போகாமல் இருக்கும்.

Advertisement

Advertisement

தேங்காய் பர்ஃபி செய்யும்போது ஏலக்காய்த் துணுக்குக்குப் பதிலாக சிறிது வெனிலா எùஸன்ஸ் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

தேயிலைச் சாறுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால், தேநீர் தயாரிக்கும்போது பாத்திரத்தில் கறை படியாது.

வடுமாங்காய் வாங்கும்போது, காம்புடன் கூடிய மாங்காயாக வாங்கினால் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும்.

பருப்பு  உசிலி செய்யும்போது எண்ணெயை மீதப்படுத்தவும் அதே சமயம் உதிரி உதிரியாகவும் இருக்க ஓர் அருமையான வழி:

ஊற வைத்த கடலைப் பருப்பை மிளகாய், உப்பு,  பெருங்காயத்துடன் தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், அதை ஆறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து உசிலியில் சேர்த்தால் உதிரி உதிரியாக நீங்கள் விரும்பும் உசிலி தயார்.

மிக்ஸியின் ஜாடியில் என்ன உள்ள பிளேடைக் கழற்ற முடியாதபோது அது மூழ்கும் அளவுக்கு வெந்நீர்/ ஊற்றி சிறிது நேரம் கழித்து வெந்நீரை ஊற்றி விட்டுக் கழற்றினால் எளிதில் கழற்றி விடலாம்.

கிழங்கு வகைகளை சீக்கிரம் வேக வேக்க வேண்டுமானால் பத்து நிமிடங்கள் உப்பு கலந்து நீரில் ஊறவைத்து, பிறகு வேக வையுங்கள். எளிதில் வெந்துவிடும்.

முட்டைக் கோûஸத் துருவி நன்றாக வதக்கி மிளகாய், புளி, சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.

உருளைக் கிழங்கை போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் நன்றாக வதக்கி, உருட்டி, கடலைமாவில் தேய்த்து பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் போண்டா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments