'வர, வர சீரியல்கள் ரொம்ப போரடிக்குதுடி...'
'ஆமாம்டி... சண்டை போட மாமியார் இல்லைன்னா அப்படிதான் இருக்கும்...'
-அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.
'என்னடி... தோசையில் பொத்தல், பொத்தலா இருக்கே?''
'அத்தே... அது ஜல்லடை தோசை..!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'பசி வந்திட பத்தும் பறந்து போகுமுன்னு சொல்லுவாங்களே... முதலாவது எதுடி...?'
'பர்ஸில் இருக்கிற பணம்தான்!'
'ஏன்டி... உங்க வீட்டில் நீ நின்னுகிட்டே சாப்பிடுறே?'
'குந்தி தின்றால் குன்றும் கரையும்னு பழமொழி தெரியாதா உனக்கு?'
-ரத்னம் மரகதம், கோவை.
'என்னங்க? நீங்களா கேட்பீங்கன்னு நினைச்சேன்... ஏன் அழுதேன்னு கேட்டீங்களா!'
'இல்லை... வெங்காயம் அரிந்ததாலே அழுதியோன்னு நினைச்சேன்..!'
'அத்தே... விஷயம் தெரியுமா? எதிர்வீட்டில் வீட்டோட மாப்பிளையா இருந்தவரு பிறந்த வீட்டுக்கே ஓடிப் போயிட்டாராம்!'
'எதுக்காம்..?'
'சொன்ன வேலை செய்யலைன்னு வேலைக்காரி திட்டினாளாம்..!'
'அம்மா... பெண்டாட்டிக்கு மட்டுமே பயந்த நான் இப்போ வேலைக்காரிக்கும் பயப்படுற மாதிரி ஆயிடுச்சி..!'
'என்ன ஆச்சு..?'
'வேலைக்காரி சொல்வதுதான் என் மனைவிக்கு வேதவாக்கு...'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.