தீமை செய்யா உயர்குடி மக்கள்
தனக்குச் செய்த உபகாரத்தினை நினையாமல், தம்மிடத்திலே அபகாரத்தையே ஒருவன் மிகுதியாகச் செய்தானானாலும், அவனுக்குத் தாங்கள் மீண்டும் உபகாரமே செய்வதல்லாமல்...
உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும்,}உபகாரம்
தாம்செய்வ தல்லால், தவற்றினால் தீங்கூக்கல்
Advertisement
Advertisement
வான்தோய் குடிப்பிறந்தார்க்கு இல்.
(பாடல் 69 அதிகாரம்: சினம் இன்மை)
தனக்குச் செய்த உபகாரத்தினை நினையாமல், தம்மிடத்திலே அபகாரத்தையே ஒருவன் மிகுதியாகச் செய்தானானாலும், அவனுக்குத் தாங்கள் மீண்டும் உபகாரமே செய்வதல்லாமல், பிசகியுங்கூடத் தீமையைச் செய்யத் தொடங்குதல், வானளாவிய புகழினை உடைய உயர்குடியிலே பிறந்தவர்களிடத்திலே ஒரு போதும் இல்லையாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.