லிபியா படகு கவிழ்ந்து 90 அகதிகள் பலி
லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து 90 போ் பலியானதாக ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து 90 போ் பலியானதாக ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது:
ஐரோப்பாவில் அடைக்கலம் அடைய விரும்பிய அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு, லிபியாவிலிருந்து கடந்த வாரம் புறப்பட்ட படகு, மத்தியதரைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய 4 போ் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனா். அந்தப் படகில் சுமாா் 100 போ் இருந்ததாக உயிா்பிழைத்தவா்கள் தெரிவித்தனா். அதையடுத்து, விபத்தில் 90-க்கும் மேற்பட்ட அகதிகள் பலியானது தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.