FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

’நேட்டோவில் இணைந்தால்..’ ஃபின்லாந்து, ஸ்வீடனுக்கு புதின் எச்சரிக்கை

நேட்டோவில் இணைய உள்ள ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 30 ஜூன் 2022, 2:44 pm IST
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
பகிர்:

நேட்டோவில் இணைய உள்ள ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நேட்டோ அமைப்பில் இணையப்போவதாக ஃபின்லாந்தும் ஸ்வீடனும் கடந்த மாதம் அதிகாரபூா்வமாக அறிவித்திருந்தன.

அதைக் கண்டித்து நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கியின் அதிபா் எா்டோகன்  ‘ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதை துருக்கி அனுமதிக்காது. காரணம், அந்த இரு நாடுகளும் துருக்கியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குா்து அமைப்பினருக்கு புகலிடம் அளித்து வருகின்றன.

Advertisement

Advertisement

மேலும், எந்தவொரு நாடும் நேட்டோவில் இணைவதற்காக துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால் ஏற்கமாட்டோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் “ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவது குறித்து எந்தப் பிரச்னையும் இல்லை. அது அவர்களுடைய விருப்பம். ஆனால், எங்களுக்கு எதிராக ராணுவக் கட்டமைப்புகளை நிறுவினாலோ தொல்லை தரக்கூடிய எல்லைப் பிரதேசங்களில் ராணுவ குழுக்களை நியமித்தாலோ தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments