முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0-ஆகப் பதிவானது

பாகிஸ்தானில் திங்கள்கிழமை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 18 டிசம்பர் 2023, 3:30 pm IST
பகிர்:

பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இன்று (டிச.18) காலை 11.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பாக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.