FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

முதல்முறையாக ஐரோப்பிய பயணம் மேற்கொள்ளும் சிரியாவின் இடைக்கால அதிபர்!

சிரியாவின் இடைக்கால அதிபர் ஐரோப்பிய நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதைப் பற்றி...

Updated On : 7 மே 2025, 8:03 pm IST
சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல்-ஷரா பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ்-க்கு வந்தடைந்தார். - எக்ஸ்
பகிர்:

சிரியாவின் இடைக்கால அதிபர் முதல்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிரியா நாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த அஸாத் குடும்பத்தின் ஆட்சி உள்நாட்டுப் போரின் மூலம் கவிழ்க்கப்பட்டு, கிளர்ச்சிப்படைகளின் தலைமையிலான ஆட்சி நிறுவப்பட்டது. அதன் பின்னர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனும் கிளர்ச்சிப்படையின் தலைவரான அஹ்மத் அல்-ஷரா சிரியாவின் இடைக்கால அதிபராக பதவியேற்றார்.

இந்தப் புதிய அரசை பல்வேறு நாடுகள் தொடர்ந்து அங்கீகரித்து வரும் நிலையில் அதிபர் அஹ்மத் அல்-ஷரா முதல்முறையாக ஐரோப்பிய நாடொன்றுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று (மே 7) தலைநகர் பாரீஸ்-க்கு வந்தடைந்தார். மேலும், இன்று மாலை அவர், அதிபர் இம்மானுவேல் மாக்ரோனைச் சந்தித்து பேசவுள்ளதாக சிரியா அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்புகள், பொருளாதார ஒத்துழைப்பு, வான்வழிப் போக்குவரத்து, மின்சாரம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் மாளிகை கூறுகையில், சுதந்திரமான, நிலையான மற்றும் இறையான்மை உடைய சிரியாவுக்கு அந்நாடு ஆதரவளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிபர் பஷார் அல்-அஸாத் ஆட்சியில் சிரியாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் விதிக்கப்பட்டிருந்த தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கி வரும் சூழலில் சிரியாவின் இடைக்கால அரசு மேற்கத்திய நாடுகளுடனான தனது உறவுகளை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றது.

மேலும், கடந்த வாரம் சிரியாவின் இடைக்கால அரசின் அதாரவுப்படைகள் மற்றும் ட்ருஸ் எனும் சிறுபான்மைப் பிரிவினருக்கும் இடையிலான மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இத்தகைய சூழலில் இந்தச் சந்திப்பானது மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments