ஹாங் காங்கில் விமான விபத்து: இருவர் பலி!
ஹாங் காங்கில் ஏற்பட்ட விமான விபத்து குறித்து...
ஹாங் காங்கில் தரையிரங்கும்போது ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு விமானம் ஹாங் காங் விமான நிலையத்தில் தரையிரங்கும்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
துபையிலிருந்து சரக்குகளை ஏற்றிவந்த விமானம் ஹாங் காங் விமான நிலையத்தில் காலை 3.50 மணிக்கு தரையிரங்கியுள்ளது.
Advertisement
Advertisement
விமான ஓடுதளத்தில் தரையிரங்கும்போது வழுக்கி, அருகில் இருந்த கடலில் விழுந்துள்ளது.
இந்த விமானத்தில் இருந்தவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக ஹாங் காங் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் இருவர் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்கள்.
A cargo aircraft skidded off a Hong Kong airport runway into the sea when landing early Monday, with two people confirmed dead.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.