ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலி
ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலையில் சிக்கி சுமார் 16,000 பேர் பலியானது குறித்து...
ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலையில் சிக்கி சுமார் 16,000 பேர் பலியாகியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளிலும் வெப்ப அலை வீசி வரும்நிலையில், குளிர் பிரதேச நாடான ஐரோப்பாவிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் 40 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரித்தால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த ஜூன் மாத இறுதியில் வரலாறு காணாத கடும் வெப்ப அலையால், வழக்கமான உயிரிழப்புகளின் எண்ணிக்கையைவிட சுமார் 16,000 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளில்தான் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2000-க்குப் பிறகு பதிவான மிகவும் மோசமான வெப்ப அலை மரண விகிதம் இதுதான் என பெல்ஜியம் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியான வாலோனியாவில், வழக்கமாக எதிர்பார்க்கப்பட்டதைவிட இறப்பு விகிதம் 77 சதவிகிதம் அதிகமாக இருந்தது.
வெப்பநிலை அதிகரிப்பால், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டு, நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
16,000 people dead due to the heatwave scorching Europe
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.