FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் ராஜிநாமா! ஷேக் ஹசீனா உடன் பேசியது காரணமா?

வங்கதேச நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் ராஜிநாமா செய்துள்ளது குறித்து...

Updated On : 24 ஜூலை 2026, 6:04 pm IST
வங்கதேச அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீன் ராஜிநாமா... - கோப்புப் படம்
பகிர்:

வங்கதேச நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

வங்கதேச நாட்டின் அதிபராகக் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் முகமது ஷஹாபுதீன் இன்று (ஜூலை 24) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமா கடிதத்தை வங்கதேச நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் மாணவர்கள் போராட்டத்தில் அந்நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அதிபர் முகமது ஷஹாபுதீனின் பதவி மட்டும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நிலைத்து வந்தது.

Advertisement

Advertisement

முகமது ஷஹாபுதீனின் பதவிக்காலம் வரும் 2028 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் ராஜிநாமா செய்துள்ளது பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

தனது திடீர் ராஜிநாமா குறித்து முன்னாள் அதிபர் முகமது ஷஹாபுதீன் கூறுகையில்,

“நான் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை” எனக் கூறியுள்ளார்.

மருத்துவக் காரணங்களால் முகமது ஷஹாபுதீன் பதவி விலகியதாகக் கூறியுள்ள நிலையில், கடந்த மே மாதம் மருத்துவச் சிகிச்சைக்காக லண்டன் சென்றபோது அவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடன் செல்போனில் உரையாடியதாகவும், அவர்களின் உரையாடல்கள் கசிந்ததைத் தொடர்ந்து தற்போது ராஜிநாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், மாணவர்கள் போராட்டத்திற்குப் பிறகு வங்கதேசத்தின் இடைக்கால ஆலோசகராக இருந்த முகமது யூனுஸின் ஆட்சியில் அதிபர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு முயற்சிகள் நடைபெற்றதாக முகமது ஷஹாபுதீன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Bangladesh President Mohammed Shahabuddin has resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments