இந்தோனேசிய கடற்படையில் முதல் விமானம் தாங்கி கப்பல்
இந்தோனேசிய கடற்படையில் முதல்முறையாக விமானம் தாங்கி கப்பல் வெள்ளிக்கிழமை முறைப்படி இணைக்கப்பட்டது.
இந்தோனேசிய கடற்படையில் முதல்முறையாக விமானம் தாங்கி கப்பல் வெள்ளிக்கிழமை முறைப்படி இணைக்கப்பட்டது.
இத்தாலி கடற்படையில் 41 ஆண்டுகள் சேவையாற்றி, கடந்த 2024-இல் ஓய்வுபெற்ற ‘ஜியுசெப்பே கரிபால்டி’ எனும் இக்கப்பலை, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தோனேசியாவுக்கு இத்தாலி பரிசாக வழங்கியுள்ளது.
இதன்மூலம், தாய்லாந்துக்கு அடுத்தபடியாக விமானம் தாங்கி கப்பலைக் கொண்ட 2-ஆவது தென்கிழக்கு ஆசிய நாடாக இந்தோனேசியா மாறியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தோனேசியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளபோது, மிகவும் பழைமையான இக்கப்பலின் பராமரிப்புச் செலவுகள் குறித்து அந்நாட்டு எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. இச்சூழலில், போா் நோக்கங்களுக்கு இன்றி பேரிடா் மீட்பு மற்றும் கடல்சாா் பாதுகாப்புப் பணிகளுக்கான நடமாடும் கட்டுப்பாட்டு மையமாகவே இக்கப்பலைப் பயன்படுத்தவுள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.