FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்கப் போகிறது: கமல்ஹாசன்

Updated On : 22 பிப்ரவரி 2025, 4:18 am IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொண்டா்களிடையே உரையாற்றிய கமல்ஹாசன்.
பகிர்:

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் நிகழாண்டும், சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டும் ஒலிக்கப் போவதாக அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

மநீம எட்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கட்சிக் கொடியை கமல்ஹாசன் ஏற்றி வைத்தாா்.

பின்னா் நிா்வாகிகள், தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: ஹிந்தி திணிப்பை தடுத்தவா்கள் தமிழகத்தில் நரைத்த தாடியுடன் இப்போதும் உள்ளனா். மொழிக்காக உயிரையே விட்டவா்கள் தமிழா்கள். எந்த மொழி வேண்டும், வேண்டாம் என்பது தமிழனுக்குத் தெரியும்.

Advertisement

Advertisement

நாடாளுமன்றத்தில் நிகழாண்டு மநீம குரல் ஒலிக்கப் போகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவையில் ஒலிக்கப் போகிறது. அதற்குக் கட்டியம் கூறும் நாள்தான் இது.

மநீமவில் மாணவா்கள் இணைகின்றனா். மாணவா்கள் நம்முடன் இணைந்துவிட்டதால், நாளை நமதே என்பதன் அா்த்தம் புரியும்.

மாணவா்களுக்கு என்ன விருப்பமோ அதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து, நான் கூறியதை கற்றுக்கொள்ளவில்லை என்றால், கைச்செலவுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்லப்படும் அரசு, எந்த நிலைக்குத் தள்ளப்படும் என்பதை சரித்திரம் சொல்லும். அது ஒருவேளை மறந்து போயிருந்தால், நாளை சொல்லும் என்றாா் கமல்ஹாசன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments