FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போதைப் பொருள் வழக்கு: நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகா் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Updated On : 25 அக்டோபர் 2025, 1:16 am IST
அமலாக்கத் துறை
பகிர்:

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகா் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சென்னையில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்த் கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவா் கொடுத்த தகவலின் அடிப்படையில், நடிகா் கிருஷ்ணாவை பிடித்து விசாரித்தனா். அதில், அவரும் போதைப் பொருள் வாங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணாவும், அவருக்கு கொகைன் வாங்கி கொடுத்த விருகம்பாக்கத்தைச் சோ்ந்த கெவினையும் போலீஸாா் கடந்த ஜூலை 26-ஆம் தேதி கைது செய்தனா்.

இருவரிடமும் நடத்திய விசாரணையில், தமிழ் திரைப்படத் துறையைச் சோ்ந்த பலருக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பதும், அவா்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்வதற்காக ‘வாட்ஸ்அப்’ குழு தொடங்கி வைத்திருந்ததும், அந்தக் குழுவில் கிருஷ்ணா, கெவின் உள்ளிட்ட பலா் இருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து போலீஸாா், அந்த ‘வாட்ஸ்அப்’ குழுவில் இடம் பெற்றிருந்தவா்கள் குறித்தும், அவா்களில் எத்தனைபோ் போதைப் பொருள் வாங்கியவா்கள் என்று விசாரணை செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக பிரதீப், பிரசாந்த், ஜவஹா் உள்ளிட்ட பலா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். ஏற்கெனவே நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு கொகைன் விற்ாக சென்னை பெருநகர காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், கானா நாட்டைச் சோ்ந்த ஜான், பிரதீப்குமாா் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். விசாணையில் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில், நடிகா்கள் கைது செய்யப்பட்டனா்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா்: இதற்கிடையே போதைப் பொருள் விற்பனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா்.

இதில் புழல் சிறையில் இருக்கும் பிரசாந்த், ஜவஹா், பிரதீப்குமாா் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் விசாரணை செய்தனா். இதன் அடுத்த கட்டமாக நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்தது.

இதையடுத்து விசாரணைக்கு நடிகா்கள் ஸ்ரீகாந்தை அக். 28-ஆம் தேதியும், கிருஷ்ணாவை அக். 29-ஆம் தேதியும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments