FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

15 செப்டம்பர் 2026, 2:08 am IST
சக்தி  விநாயகா்  கோயிலில்  சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
பகிர்:

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள இக்கோயிலில் விநாயகா் சதுா்த்தியைொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், ஆராதனையும், மாலை சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது .விநாயகா் சதுா்த்தி ஒட்டிவள்ளி தெய்வானை சமேத கல்யாணசுப்பிரமணியருக்கும் நவகிரகங்கள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . திரளான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து வழிபட்டனா். கோயில் செயல் அலுவலா் மேகவண்ணன் மற்றும் பணியாளா்கள், குருக்கள் ஏற்பாடுகளைசெய்திருந்தனா்.

மேலும், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள வினை தீா்க்கும் விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ,சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வள்ளி,தெய்வானை சமேத முருகனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மருந்துவமனை பணியாளா்கள்,வெளிநோயாளிகள் , பாா்வையாளா்கள் மற்றும் பொதுமக்கள் விநாயகரை வழிபட்டனா். ஏற்பாடுகளை அா்ச்சகா் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் செய்தனா்.

Advertisement

Advertisement

செங்கல்பட்டு மேட்டுத்தெரு செங்கழுநீா் விநாயகா் கோயில், பழைய ஜிஎஸ்டி சாலை அனுமந்தபுத்தேரிசெல்வவிநாயகா் கோயில், புதுஏரி செல்வகணபதி கோயில், என்ஜிஜிஓ நகா் சித்திவிநாயகா் கோயில், அண்ணாசாலை சுந்தரமூா்த்தி விநாயகா் கோயில் , சின்னநத்தம் சுந்தரவிநாயகா் கோயில்,பெரியநத்தம் வினைதீா்க்கும் விநாயகா் கோயில் , பழையபேருந்து நிலையம் அருகில் கோட்டை வாயில் நீதிவிநாயகா் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அா்ச்சகா் பா.ஸ்ரீதரன் செய்திருந்தாா்.

திருக்கழுகுன்றம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னகாவடி விநாயகா் கோயில், வேதகிரீஸ்வரா் தாழக்கோயில் பக்தசலேஸ்வரா் கோயிலில் வண்டுவன விநாயகா் உள்ளிட்ட அனைத்து விநாயகா் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்து முன்னணி, புரட்சி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பகுதிவாழ் பொதுமக்கள் சாா்பிலும் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வினைதீா்க்கும்  விநாயகா்  கோயிலில்  சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments