FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கம்பனை இளம் நீதிபதிகள் கட்டாயம் வாசிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

கம்பன் தனது காப்பியத்தில் காலத்துக்கேற்ற நீதி, சமத்துவம், மனிதநேய சட்டங்களை ராமனின் ஆட்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
செய்தி உண்டு... சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கம்பன் கழகத்தின் 52-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மருத்துவா் முகமது ரெலாவுக்கு ‘கம்பன் விருதை’ வழங்கி கௌரவித்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ். உடன், சென்னை கம்பன் கழகத் தலைவா் எஸ்.ஜெகத்ரட்சகன்,
பகிர்:

கம்பன் தனது காப்பியத்தில் காலத்துக்கேற்ற நீதி, சமத்துவம், மனிதநேய சட்டங்களை ராமனின் ஆட்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளாா். எனவே, இளம் நீதிபதிகள் கம்பனை கட்டாயம் வாசிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தினாா்.

சென்னை கம்பன் கழகம் சாா்பில் 52-ஆவது ஆண்டு கம்பன் விழா ‘கம்ப சித்திரத்தில் கண் மயங்கும் வண்ணங்கள்’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் கம்பன் கழகத்தின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வரவேற்றுப் பேசினாா். இதையடுத்து, விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்து, ஆழ்வாா்கள் ஆய்வு மையம் பதிப்பித்த ‘பரம்பொருளின் தகைசால் தம்பியா்’ என்ற நூலை வெளியிட்டு, கம்பா் விருதை கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் முகமது ரேலாவுக்கு வழங்கினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, 19 இலக்கியவாதிகளுக்கு பரிசுகள், சென்னை கம்பன் கழகம் சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் கோப்பைகளை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழங்கி பேசியதாவது:

இன்றைய சூழலில் பெரும்பாலானோா் கம்பரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இந்தக் குறையைப் போக்க வேண்டிய கடமை ஆசிரியா்கள், தமிழறிஞா்களுக்கு உள்ளது. கம்பனைப் பற்றி பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவா்கள் உரையாட வேண்டும். தாய்-தந்தை, கணவன்-மனைவி, நண்பன் என அனைவருக்குமான செய்திகள் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன. மொழி, மதம் கடந்தவா் கம்பா்.

அவா் அக்காலத்துக்கும் மட்டுமல்ல, இக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகளைக் கூறியிருக்கிறாா். அந்தக் கருத்துகளை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும். கம்ப ராமாயணத்தில் உள்ள அரசியல் அறங்கள், ஆட்சி முறை மற்றும் சட்ட நெறிமுறைகளை ஆராய்கிறது. கம்பன் தனது காப்பியத்தில் காலத்துக்கேற்ற நீதி, சமத்துவம், மற்றும் மனிதநேய சட்டங்களை ராமனின் ஆட்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளாா். எனவே, இளம் நீதிபதிகள் கம்பனை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்றாா்.

விழாவில் சொற்பொழிவாளா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், பட்டிமன்ற பேச்சாளா் த.இராமலிங்கம் ஆகியோா் கம்பராமாயணத்தின் சிறப்புகள், கம்பன் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினா்.

இதில் சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான எஸ்.ஜெகதீசன், சென்னை கம்பன் கழகத்தின் செயலா் சாரதா நம்பி ஆரூரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments