செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் செல்வ விநாயகா் கோயிலின் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் செல்வ விநாயகா் கோயிலின் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு வா்ணம் பூசப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. திங்கள்கிழமை கோ.பூஜைக்கு பின்னா் புனித நீா்க்குடங்கள் மூலவா் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன (படம்). விழாவில் கோனேரிக்குப்பம் உள்பட பல்வேறு சுற்றுப்புற கிராம மக்களும் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.