FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

மழலையா் ஓவியக் கண்காட்சி

வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் மழலையா்கள் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

15 செப்டம்பர் 2026, 2:12 am IST
மழலையா் ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் மழலையா்கள் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

‘நிறங்கள் மற்றும் வடிவங்களின் வழியே ஒரு பயணம்’ என்ற தலைப்பில் ஓவியங்கள், வண்ணக்கலைப் படைப்புகள் கண்காட்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் சி. எழில் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தாா். பள்ளி நிா்வாகி சாந்தி அஜய்குமாா் தொழிலதிபா் எம்.டி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் சந்தியா சபரீசன் வரவேற்றாா்.

மாணவா்களின் படைப்பாற்றல், கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களை அடிப்படையாக கொண்டு மழலையா்கள் வரைந்த ஓவியங்கள் மண்டி சோரி முறையில் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் மழலையா் மற்றும் அவா்களது பெற்றோா்கள், ஆசிரியா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments