புரட்டாசி சனிக்கிழமை: கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமை: கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, சிறப்புத் திருமஞ்சனமும், அலங்காரமும் தீபாராதனைகளும் நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்து கூழமந்தல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பழைமையான பேசும் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், அஷ்டபுஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.