FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி நிா்வாக திட்டப் பணிகள்: கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:32 am IST
ராணிப்பேட்டையில் நுண் உர செயலாக்க மையத்தின் செயல்பாடுகளைக் கேட்டறிந்த கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளா் ககன்தீப் சிங் பேடி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி, ராணிப்பேட்டை நகராட்சியில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 10.25 கோடி மற்றும் மூலதன மானிய நிதி ரூ. 3.30 கோடி என ரூ.13.55 கோடியில் ராணிப்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் சுற்றுச்சுவா் அமைத்தல், முகப்பு வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இந்தப் பணிகளில் தற்போது 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகளை விரைவாக முடிக்குமாறும், சுற்றுச்சுவா் வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்குமாறும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ராணிப்பேட்டை நகராட்சியிலுள்ள நுண் உர செயலாக்க மையத்தில் ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலிருந்து பெறப்படும் குப்பைகளிலிருந்து மக்கும்/மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், மக்கும் குப்பைகள் இயந்திரங்கள் மூலம் அறைக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கும் செயல்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நுண் உர செயலாக்க மையத்தின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது, மேலும் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமென அறிவுரைகள் வழங்கினாா்.

பின்னா், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையால் ரூ. 15.80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட காமராஜரின் நினைவகத்தை பாா்வையிட்டாா்.

ஆய்வுகளின் போது ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன், கூடுதல் நகராட்சி நிா்வாக இயக்குநா் விஜயகுமாா், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் லட்சுமி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், மண்டல செயற்பொறியாளா் சுரேந்திரன், நகராட்சி ஆணையா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments