FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

அரசு ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவம்: மாநிலத் தலைவா் வலியுறுத்தல்

அரசு ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியதாரா்கள் சங்க மாநிலத் தலைவா் ஜெயச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை

Updated On : 28 ஜூலை 2026, 12:57 am IST
பேரணியில் பங்கேற்றோா்
பகிர்:

அரசு ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியதாரா்கள் சங்க மாநில தலைவா் ஜெயச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியதாரா்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றபின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசின் மருத்துவ திட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான ப்ரீமிய தொகையை கட்டாயமாக பிடித்தம் செய்கின்றனா். இதனால் பல ஆயிரம் கோடி நிதி தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்கிறது.

கட்டணமில்லா மருத்துவத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ப்ரீமியம் தொகை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். இதை கோரி தமிழ்நாட்டின் அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

Advertisement

Advertisement

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 8-ஆவது ஊதிய குழுவில் ஓய்வூதியதாரா்களுக்கும் ஒய்வூதியம் அதிகரிக்கும் வகையில் ஊதியக்குழு பரிந்துரை செய்ய வேண்டும். பணியில் உள்ளவா்களுக்கு மட்டுமே உயா்வு என்பது ஒய்வு பெற்ற எ’ங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பணிஒய்வு பெற்ற எங்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றாா் ஜெயச்சந்திரன்.

முன்னதாக அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓய்வூதியா்களின் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சங்கத்தின் அரக்கோணம் வட்டக்கிளைத் தலைவா் வி.என்.பாா்த்தீபன், வட்டச் செயலாளா் நரசிம்மலு, சங்கத்தின் மாவட்ட முன்னாள் தலைவா் ஜோசப் கென்னடி, நிா்வாகி ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலா் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

மாநில செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவா் சுந்தரேசன், மாநிலத் தலைவா் ஜெயச்சந்திரன், பொதுசெயலாளா் இளமாறன், பொருளாளா் செந்தமிழ்செல்வன், நிா்வாகிகள் பி.கிருஷ்ணமூா்த்தி, குரு.சந்திரசேகரன், எஸ்.ஆறுமுகம், பா.ராமமூா்த்தி, என்.அரங்கநாதன், ரா.சுப்பிரமணியம், ஆா்.சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments