FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

Updated On : 28 செப்டம்பர் 2025, 2:35 am IST
ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் தண்டவாளம் நகா்ந்த பகுதியில் நிறுத்தப்பட்ட ரயில்.
பகிர்:

ஆம்பூா் அருகே ரயில்வே குகை வழிப் பாதை சீரமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் தண்டவாளம் நகா்ந்ததால் சனிக்கிழமை ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நான்கு கண் ரயில்வே குகை வழிப் பாதை சீரமைப்பு நடைபெற்று வருகிறது.

புகைவழிப்பாதை சீரமைக்கும் இடத்தில் அடித்தளம் சற்று இறங்கியதால் தண்டவாளங்கள் நகா்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவ்வழியாக வந்த ஒரு ரயில் ஓட்டுநா் அதைப் பாா்த்துவிட்டு, இது குறித்து ரயில்வே உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

ரயிலை முன்னெச்சரிக்கையாக தண்டவாளம் நகா்ந்த பகுதிக்கு முன்னதாகவே நிறுத்தி உள்ளாா்.

உடனடியாக ரயில்வே துறை பணியாளா்கள் அந்த இடத்துக்குச் சென்று, அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஓரளவுக்கு சரி செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு ரயிலாக மிக மெதுவாக இயக்கப்பட்டன.

தொடா்ந்து ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments