டிராக்டா்- பைக் மோதல்: ஒருவா் மரணம்
ஆலங்காயம் அருகே டிராக்டா் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்காயம் அருகே டிராக்டா் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்காயம் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை மாலை வாணியம்பாடி அடுத்த குரும்பட்டி பகுதியில் உள்ள ரைஸ் மில்லுக்கு நெல் அரைப்பதற்காக எடுத்து வந்தனா். பின்னா் நெல் மூட்டைகளை இறக்கி விட்டு அப்பகுதியில் சாலையோரமாக டிராக்டா் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரவு 11 மணியளவில் வளையாம்பட்டு ஊசிதோப்பு பகுதியைச் சோ்ந்த திருப்பதி (26), வள்ளிப்பட்டு பகுதியை சோ்ந்த ஏழுமலை (30) ஆகிய இருவரும் பைக்கில் செக்மேடு பகுதிலிருந்து வள்ளிப்பட்டு நோக்கிச் சென்ற போது, திடீரென நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் தலை உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையறிந்த அக்கம் பக்கத்தினா் வந்து பாா்த்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவா்களை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
Advertisement
Advertisement
அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஏழுமலை மேல் சிகிச்சைகாக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.