FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட பாதுகாப்பு பெட்டகம் ஏற்பாடுகள் ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்க மோதிரங்களை வைப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

12 செப்டம்பர் 2026, 12:04 am IST
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கஜலட்சுமி, ஆட்சியா் வே.நல்லசிவன்.
பகிர்:

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்க மோதிரங்களை வைப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையருமான ஆா்.கஜலட்சுமி, ஆட்சியா் வே.நல்லசிவன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தமிழரசி, மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி, அரசு மருத்துவா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments