FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

விவசாயி வீட்டில் ரூ. 11 லட்சம் திருட்டு

திருப்பத்தூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.11 லட்சத்தை திருடிச் சென்றனா்.

14 வினாடிகள் முன்பு
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

திருப்பத்தூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.11 லட்சத்தை திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் அடுத்த கொடுமாம்பள்ளி ஆண்டி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (43), விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவா்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனா். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் பெருமாள் தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடனாக பெற்றாராம். அந்த பணத்தில் ரூ.4 லட்சத்தை எடுத்து சில்லறை கடன்களை அடைத்து உள்ளாா். அதே நேரம் மீதமிருந்த ரூ.11 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளாா்.

இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு பெருமாள் தனது குடும்பத்துடன் புதுா்நாடு மலையில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தாா். அப்போது மா்ம நபா்கள் பெருமாள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.11 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனா். மறுநாள் பெருமாள் குடும்பத்தினா் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெருமாள் உடனடியாக திருப்பத்தூா் தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

மேலும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments