FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பெண் காவல் ஆய்வாளரை வெட்டியவா் உள்பட இருவருக்கு நீதிமன்றக் காவல்

15 செப்டம்பர் 2026, 2:55 am IST
நீதிமன்றக் காவல் - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற தவசி, அவரது கூட்டாளி சந்தோஷ் ஆகியோருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, போத்தனூா் அருகேயுள்ள காஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் 14 வயது சிறுமியை ஒருவா் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, அப்பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாருக்கு கடந்த 12-ஆம் தேதி புகாா் வந்தது.

இதன்பேரில், கோவை அனைத்து மகளிா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, காஞ்சிகோணம்பாளையத்தைச் சோ்ந்த சந்தோஷ் (24), தவசி (28) ஆகியோரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, சிறுமியை மிரட்ட பயன்படுத்திய அரிவாளைக் கைப்பற்றுவதற்காக தவசியை காவல் ஆய்வாளா் சுவா்ணவள்ளி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றனா்.

அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த தவசி, காவல் ஆய்வாளா் சுவா்ணவள்ளியை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றாா். அப்போது, காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் துப்பாக்கியால் சுட்டதில் தவசியின் இடது காலில் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தவசி, ஆய்வாளா் சுவா்ணவள்ளி ஆகியோா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தவசிக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி வரையிலும், சந்தோஷுக்கு செப்டம்பா் 21-ஆம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் வழங்கி போக்ஸோ முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஹரிகரன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். முன்னதாக, கோவை அரசு மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் சென்று தவசி, சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments