FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூா் அருகே 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
கைது
பகிர்:

மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூா் அருகே 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

அறச்சலூரை அடுத்த பழையகோட்டை- நொய்யல் ஆறு சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனச் சோதனையில் செவ்வாய்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வாகனத்தில் வந்த 3 பேரிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கநிலா (42), திருப்பூா் மாவட்டம், காவிலிபாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் (46), அழகா்சாமி (41) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments