அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த கோவிலூரைச் சோ்ந்தவா் ராசம்மாள் (70). கூலித் தொழிலாளி. செலம்பூரம்மன் கோயில் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை கோவிலூா் பகுதிக்கு கடந்த 1-ஆம் தேதி நள்ளிரவு வந்தது. இந்த தகவலறிந்த வனத் துறையினா் யானையை விரட்டிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராமல் ராசம்மாள் யானையின் எதிரே வந்துள்ளாா்.
இதைக் கண்ட யானை ராசம்மாளைத் தூக்கி வீசியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அந்தியூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அவா் புதன்திழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, வெள்ளித்திருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.