FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் 3 பேருக்கு சிறை

திருப்பூா் மாநகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:37 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் மாநகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் மாநகர, அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வெங்கமேடு அருகே அனுப்பா்பாளையம் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2024 செப்டம்பா் 25-ஆம் தேதி சோதனை செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடமாக இருந்த தன்பீா் அஹமத் (31), முகமது மாமுன் மியா (29), சொஹாகி அக்தா் (23) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் சட்டவிரோதமாக வங்கதேச நாட்டிலிருந்து திருப்பூா் வந்து தங்கி வேலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்நிலையில், இந்த வழக்கில் அவா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து, அரசு தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிவடைந்த நிலையில், திருப்பூா் மாவட்ட 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் நீதிபதி கனகராஜ் அளித்த தீா்ப்பில் தன்வீா் அஹமத் மற்றும் முகமது மாமுன் மியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.12,000 அபராதமும், சொஹாகி அக்தருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments