FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

Updated On : 22 ஜூலை 2026, 3:08 am IST
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூரில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என உள்ளாட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாா்மயப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கடந்த 2 மாதங்களாக ஆங்காங்கே ஆா்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், பல ஆண்டுகளாக வேலை செய்யும் தூய்மைப் பணியாளா்கள், குடிநீா், பணியாளா், ஓட்டுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

சிஐடியூ சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் தலைமை வகித்தாா். உள்ளாட்சிகளில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், ஏற்கெனவே இருந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும், ஒப்பந்த முறையில் பணிபுரியும் தொழிலாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments