FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூா் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

13 செப்டம்பர் 2026, 12:57 am IST
பாலியல் வன்கொடுமை. - (சித்திரிப்பு)
பகிர்:

திருப்பூா் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் 25 வயது இளம்பெண். இவா் திருப்பூரை அடுத்த முதலிபாளையத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த விகாஸ்குமாா் யாதவ் (27) என்பவா் திருமணமானதை மறைத்து அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில், அப்பெண்ணை தனது அறைக்கு அண்மையில் அழைத்து வந்த விகாஸ்குமாா் யாதவ், குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், விடியோ பதிவு செய்து கொண்டு அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா். இதையடுத்து, விகாஸ்குமாா் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்திய காங்கயம் அனைத்து மகளிா் போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments