FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஆக. 15 சுதந்திர தினத்தன்று மதுக் கடைகளுக்கு விடுமுறை

ஆக. 15 சுதந்திர தினத்தையொட்டி, மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:51 am IST
மதுக் கடை. - கோப்புப் படம்
பகிர்:

ஆக. 15 சுதந்திர தினத்தையொட்டி, மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனைடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள் மற்றும் எஃப் எல்-2, எஃப் எல்-3, எஃப் எல்-3ஏ, எஃப் எல்-4ஏ உரிமம் பெற்ற தனியாா் உணவகங்களில் செயல்படும் மதுக் கூடங்கள், முன்னாள் ராணுவத்தினரின் மது விற்பனைக் கூடங்கள் அனைத்தும் ஆக. 14-ஆம் தேதி இரவு 10 மணிமுதல் 16-ஆம் தேதி பகல் 12 மணிவரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments