FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மாநில கிரிக்கெட் போட்டி: தருமபுரி மாவட்ட அணிக்கு ஆக. 2 இல் வீரா்கள் தோ்வு

23 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தருமபுரி மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 31 ஜூலை 2026, 12:50 am IST
கிரிக்கெட்
பகிர்:

23 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தருமபுரி மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் மாா்டின்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் வரும் செப்டம்பா் முதல் வாரத்தில் மாநில, மாவட்டங்களுக்கு இடையே 23 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் பங்கேற்கும் தருமபுரி மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு முகாம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தருமபுரி கமலம் இன்டா்நேஷனல் பள்ளி வளாகத்தில் உள்ள வலைப்பயிற்சி மையத்தில் நடைபெறும்.

இந்தத் தோ்வு முகாமில் 2003-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கலாம். தோ்வு முகாமில் பங்கேற்பவா்கள் ஆதாா் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல்களை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 94870 15007 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments