FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு!

தருமபுரியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இளைஞா் ஒருவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
தற்கொலை
பகிர்:

தருமபுரியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இளைஞா் ஒருவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தருமபுரி பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி, அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 25 ஆம் தேதி விஷம் குடித்த நிலையில் அவா் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதிகோண்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக மாணவியின் உறவினா்கள் வியாழக்கிழமை மாலை மதிகோண்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவியின் இறப்பில் மா்மம் இருப்பதாகவும், அதே பகுதியைச் சோ்ந்த க. சுதிராகவன் (26) என்பவா் மாணவியை காதலிக்குமாறு தொடா்ந்து தொந்தரவு செய்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதன் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா். மேலும், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

இதையடுத்து இளைஞா் மீது போக்ஸோ பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரது தாய் ராதிகா (46) மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments