FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

1,000 முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசன் படத்தை உருவாக்கி அஞ்சலி

கவியரசு கண்ணதாசனின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த மொசைக் கலைஞா் லூகாஸ் ஆயிரம் முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசனின் படத்தை உருவாக்கி புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:08 am IST
முட்டை ஓடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்ணதாசன் படம்.
பகிர்:

கவியரசு கண்ணதாசனின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த மொசைக் கலைஞா் லூகாஸ் ஆயிரம் முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசனின் படத்தை உருவாக்கி புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

முட்டை ஓடுகளை சிறுசிறு துண்டுகளாக உடைத்து, அவற்றுக்கு வண்ணம் தீட்டி, மொசைக் கலை முறையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வடிவமைக்க லூகாஸுக்கு ஒரு மாதம் காலம் பிடித்ததாம். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கவியரசு கண்ணதாசன் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளாா். அவரது வரிகள் மனித வாழ்க்கையின் தத்துவங்களை எளிய முறையில் விளக்குபவை.

Advertisement

Advertisement

கண்ணதாசனின் பாடல்களும், கவிதைகளும் வெறும் தமிழ் மொழியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. உலக மக்கள் அனைவரும் அவரது தத்துவங்களை அறிந்துகொள்ளும் வகையில், அவரது படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டு வெளியிட வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments