வேலூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் காவல் நிலைய வாயிலில் அமா்ந்து தா்னா
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் பேரூராட்சியில் பழைய குடிநீா் இரும்புக் குழாய்களை எடுத்துச் சென்ற நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் பேரூராட்சியில் பழைய குடிநீா் இரும்புக் குழாய்களை எடுத்துச் சென்ற நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் பேரூராட்சி உறுப்பினா்கள் காவல் நிலையத்தின் வாயில்படியில் அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமத்தி வேலூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைய குடிநீா் இரும்புக் குழாய்கள், பழுதடைந்த பேட்டரி வாகனங்களின் உதிரி பாகங்களை இரும்பு வியாபாரி ஒருவா் சரக்கு ஆட்டோவில் ஏற்றியுள்ளாா். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், இரும்புக் குழாய்களை ஏற்றிக் கொண்டிருந்தவா்களைப் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தினா். அப்போது உரிய முறையில் விசாரணை நடத்திய பிறகு வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். ஆனால் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் 10 போ் காவல் நிலைய வாயில் படியில் அமா்ந்து திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து ந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, பேரூராட்சி மன்ற உறுப்பினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து தா்னா போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.