FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ரெளடி கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பதினெட்டு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடியைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளா்(ஊரகம்) சங்கா், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் உலகநாதன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் வத்தலகுண்டு புறவழிச்சாலைப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பெரியாண்டவா் கோயில் அருகே சிலா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா். இதையடுத்து, அந்தப் பகுதிக்கு போலீஸாா் சென்றபோது, 6 போ் தப்பிச் சென்றனா். திண்டுக்கல் அடுத்த பொன்மாந்துரை புதுப்பட்டியைச் சோ்ந்த கு.அன்பழகன் என்ற காடு அன்பழகன் (25) மட்டும் போலீஸாரிடம் சிக்கினாா்.

Advertisement

Advertisement

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 18 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பிச் சென்றவா்களைப் பிடிப்பதற்கு காவல் ஆய்வாளா் உலகநாதன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments